புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Sunday 25 May 2014

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்


இன்று நாம் அறிந்து கொள்ளப் போகும் பழமொழியானது 

" அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் "

நாம் அறிந்த விளக்கம் :
ஒரு மனிதன் அடித்தால் தான், அவன் உண்மையைச் சொல்லுவான் என்று நம்புகிறார்கள் பலர். பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள், இப்பழமொழியை முன்னோடியாகக் கொண்டு குழந்தைகளை பின்னி எடுக்கின்றனர். வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்கக் கூடும். அண்ணன் தம்பி கூட உதவாத பல தருணங்களில் வன்முறை நமக்கு நிச்சயமாக உதவும் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இன்றும் இப்பழமொழிக்கு அவ்வாறே விளக்கம் கொடுக்கின்றனர். 


நாம் அறியாத விளக்கம் :
உண்மை அதுவல்ல. அடி என்பது இறைவனின் திருவடி. துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை பற்றினால், அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் எதிர் நோக்கத் தேவை இருக்காது என்பதை உணர்த்தவே 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்' என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 


ஆகவே, இறைவனின் திருவடியை நம்பு, மற்றவரை நம்பாதே என்றும் பொருள் கொள்ளலாம். இதையே " பற்றுக பற்றற்றான் பாதந்தனை" என்றும் ஒரு ஞானி கூறியிருக்கிறார். ஆக இறைவன் அருள் உதவுவது போல யாரும் உதவ முடியாது என்பதை உணர்த்தும் மிக அருமையான பழமொழி இதுவாகும்.


1 comment :

  1. விளக்கதிற்கேற்ற புகைப்படம் உங்களின் தனிச்சிறப்பு...வாழ்த்துக்கள்..

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger